twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி



பட்டை நாமத்தை நெற்றியில் தாங்கிக் கொண்டு, பார்பனத்தை பகிரங்கப்படுத்தும் டிராபிக் ராமசாமி, பொது நல மனுவாக சமீபத்தில் போட்டிரு ந்தது, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமை ந்திருக்கும் அண்ணல் அம்பேத்கரின் சிலையை அகற்ற வேண்டும் என்பது தான். தனது மனுவில் அம்பேத்கரின் சிலையை உயர் நீதிமன்ற வளாகத்தில் தொடர் ந்து இருக்க அனுமதித்தால், எதிர்காலத்தில் முத்துராமலி ங்க தேவர், ராமசாமி படையாச்சி சிலைகள் வைக்க அனுமதி கேட்பார்கள் என்றும், அப்படி சிலைகள் வைக்க அனுமதிக்கும் பட்சத்தில் ஜாதி பிரச்சனை ஏற்பட்டு உயர் நீதிமன்ற வளாகம் வன்முறைக்களமாக மாறிவிடும் என்றும், அதனால் அண்ணல் அம்பேத்கரின் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அலறியிருக்கிறார்.

அறிவின் உருவகமான அண்ணல் அம்பேத்கரின் நீண்ட அரசியல் சாசனத்தை அயல் நாட்டவரும் விய ந்து பாராட்டும் வேளையில், பார்ப்பன டிராபிக் ராமசாமியின் கண்களை அம்பேத்கர் சிலை உறுத்துவதன் பிண்ணனி என்ன? அரசியல் அமைப்புச் சட்டத்தின் ந்தையான அண்ணல் அம்பேத்கரின் சிலையை நீதிமன்றத்தில் வைக்காமல் வேறு என்கு வைப்பதாம்? மதுரை நகரின் மையப்பகுதியான கோரிப்பாளையத்தில், அதுவும் நடுவே உள்ளே முத்துராமலி ங்கம் சிலையை அகற்ற வேண்டி பொதுநல வழக்கு போடும் துணிச்சல் டிராபிக் ராமசாமிக்கு உண்டா? பொழுதைப் போக்குவதற்காக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து, நீதிமன்ற னேரத்தை வீணடித்ததற்காக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ..இக்பால் மற்றும் ..சிவனானம் ஆகியோரைக் கொண்ட முதன்மைப் பெஞ்ச் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கும் டிராபிக் ராமசாமியை பகுஜன் சமாஜ் கட்சியுடன், தேவேந்திர முன்னேற்ற முண்ணனி, தேவே ந்திர அறிவுசார் குழுமம் மற்றும் தேவேந்திர கலை, இலக்கிய மாமன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

0 comments:

Post a Comment