twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி


The ballot is stronger than the bullet. அதாவது துப்பாக்கியின் தோட்டாவை விட வாக்குச் சீட்டு அதிக வலிமை வாய்ந்தது. நாம் அளிக்கும் ஓட்டு என்பது நாட்டை ஆள்பவரையும், நம்மை ஆள்பவரையும் தீர்மானிப்பது. வாக்குச் சாவடியில் விரல் நுனியில் வைக்கப்படும் மை கொண்டு தான் ஒவ்வொரு தனிமனிதனின் தலையெழுத்தும் எழுதப்படுகிறது. சுருங்கச் சொன்னால், ஒட்டுச் சீட்டு தனிமனித உரிமையை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு துருப்புச் சீட்டு. அப்படிப்பட்ட வலிமை வாய்ந்த வாக்குகளை தேவேந்திர விரோதப் போக்கை கொள்கையாகவே கடைபிடித்து வரும் திராவிடக் கட்சிகளுக்கு விற்பது என்பது எப்படி எம் இன மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது தான் இப்போது நம் முன் உள்ள கேள்வி. காரணம், இது வரை உதயசூரியனிலோ, இரட்டை இலையிலோ, பம்பரத்திலோ, மாம்பழத்திலோ, முரசிலோ இன்ன பிற சின்னங்களிலோ எம் இன மக்கள் வாக்கு என்பது பாலைவனத்தில் பாய்ச்சிய நீராய் பயனற்று போயிருப்பதையே கடந்த கால வரலாறு காட்டுகிறது.

1967ல் அரியணை ஏறியது முதல் 2006 வரை தேவேந்திர ஓட்டுகளின் பிண்ணனியில் தான் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்திருக்கின்றன். கடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திர மக்களில் 55 சகவிகிதத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க-விற்கு வாக்களித்த காரணத்தினால் தான் இன்று கருணாநிதி மாநிலத்தில் முதல் அமைச்சராகவும், மகன் மத்தியில் ரசாயன அமைச்சராகவும் கோலோச்சுகின்றனர். அப்பா கருணாநிதி தன்னை தலித்களின் சம்பந்தி என்று கூறிக் கொண்டு பட்டியல் இன மக்களின் ஓட்டுகளை பதம் பார்க்கிறார் என்றால், மகன் அழகிரியோ தேவேந்திர மக்களிடம் தான் கொண்டுள்ள உறவை சொல்லி ஏமாற்றுகிறார். கடந்த பாரளுமன்றத் தேர்தல் வாக்கு வேட்டையின் போது, தேவேந்திர மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் எல்லாம் தன்னை தேவேந்திரர் வீட்டு மருமகன் எனக் கூறிக் கொண்டு வாக்கு சேர்த்தது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கும் அளவிற்கு அற்புதமான நடிப்பு.

மதுரை பாரளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், எந்தத் தொகுதி அழகிரிக்கு அதிக வாக்குகள் வாங்கித் தந்ததோ, எந்தத் தொகுதி தேவேந்திர மக்களிடம் "நான் உங்கள் வீட்டு மருமகன், என் அப்பா உங்கள் சம்பந்தி" என்று கபட நாடகம் ஆடி எம் இன மக்களின் வாக்குகளை அறுவடை செய்தாரோ, அதே மேலூர் பகுதியில் உள்ள தேவேந்திரர் ஒருவர் வறுமை காரணமாக மகனுக்கு வேலை வேண்டி கொடுத்த மனு மீது ஆண்டுக்கணக்கில் மெளனம் சாதிக்கிறாராம்! அந்தத் தி.மு.க தேவேந்திரன் நேற்று கட்சியில் சேர்ந்து இன்று காண்டிராக்டர்களாக மாறும் இன்றைய தி.மு.க-காரன் இல்லை. மாறாக, குடும்பத்தை கழகமாக மாற்றிய கருணாநிதிக்கும், அழகிரிக்கும் கழகத்தை குடும்பமாகக் கருதி 31 ஆண்டுகளுக்கும்  மேலாக உழைத்தும், பணியாற்றியும், பல முறை சிறைக்கும் சென்றவர் அந்தத் தி.மு.க தேவேந்திரர். அப்படிப்பட்டவரின் மனு மீது தான் அழகிரி மெளனம் சாதிக்கிறார். காரணம், மனு கொடுத்தவர் ஒரு தேவேந்திரர் என்பதும், தேவேந்திர விரோதப் போக்கு என்பது தி.மு.க தலைவரின் குடும்ப ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்பதும் தான் இதற்கு காரணமாக இருக்க முடியும். மேலும் தேவேந்திர மக்களை வெறும் வாக்கு வங்கியாகவே பார்த்து பழக்கப்பட்ட தி.மு.க-விற்கும், கருணாநிதிக்கும், அழகிரிக்கும் தேவேந்திர மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு அவர்கள் வீட்டு குப்பை தொட்டியில் மட்டும் இடமுண்டு என்ற நிலையில் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது தான். இது எம் இனத்தின் இளைய தலைமுறைக்கு தெரிந்திருக்கும் வேளையில், முதிய தலைமுறை தான் இந்த விஷயத்தில் கொஞ்சம் முரண்பட்டுக் கொண்டிருக்கிறது. இருக்கட்டும், எறும்பு ஊற கல்லும் தேயும் என்கிறது பழமொழி.

சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளில் அறவே புறந்தள்ளப்பட்ட நாடார் சமுதாயம் மேற்சொன்ன அனைத்திலும் இன்று முன்னனியில் நிற்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சியில் வெங்கடேசப் பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்டால், அவரின் மனைவியை பாராளுமன்ற உறுப்பினராக்கியதோடு நிற்காமல் மத்திய உள்துறை இணை அமைச்சராக ஆக்கி அழகு பார்க்கும் கருணாநிதி, தேவேந்திர சுரேசுகளை சுட்டுக் கொல்ல உத்தரவிடுகிறார். ஹரிகிருஷ்ணன்கள் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதன் அடையாளமாக உமாசங்கர் ஐ.ஏ.எஸ் இரண்டு ஆட்சிகளிலும் பழிவாங்கும் எண்ணத்தோடு பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார். ஜெயலலிதா கொடியங்குளத்தை அரங்கேற்றினால், கருணாநிதி மாஞ்சோலையை நிகழ்த்திக் காட்டுகிறார். நாடார் இன மக்களுக்கு இந்த இரண்டு கட்சிகள் உட்பட எல்லா திராவிடக் கட்சிகளும் வக்காலத்து வாங்கும் நிலையில், தேவேந்திர மக்கள் மீதான விரோதப் போக்கைக் தொடர்ந்து கடைபிடித்து அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கிறதே. இதற்கு நமது சமூகத்தின் ஒற்றுமையின்மையும், ஓட்டுகளை விற்பதும், உறவைச் சொல்லி ஓட்டு கேட்டு நம்மை ஏமாற்றும் அரசியல்வாதிகளை அடையாளம் காணாமல் முடியாமல் அவர்களை அப்படியே நம்புவதும் தவிர வேறென்ன இருக்க முடியும்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ஆட்சி, அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் வரப் போகிறது. கட்சிகளும் அரசியல் சதுரங்கத்தில் காய்களை அழகாக நகர்த்தி வருகின்றன. அழகிரியும் நகர்த்தி வருகிறார். தென்மண்டலத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றி விட வேண்டுமாம். அதற்காக அழகிரியின் கூட்டம் நம்மிடம் பணத்தைக் கொண்டு வரலாம். அல்லது அழகிரியே காந்தி அழகிரியை கூட்டிக் கொண்டு இனத்தைச் சொல்லி வரலாம். ஏமாந்து விடக் கூடாது எம் இன சொந்தங்கள். ஏனெனில் ஒருவன் நம்மை ஒரு முறை ஏமாற்றினால் அவன் மானங்கெட்டவன்; மறு முறையும் நம்மை ஏமாற்றினான் என்றால் நாம் மானங்கெட்டவர்கள். ஆகையால் தேவேந்திரர்கள் இனியும் ஏமாறக் கூடாது. தேவேந்திர ஓட்டுகள் விற்பனைக்கல்ல என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

தேர்தல் ஜீரம் வரும் போதெல்லாம் தேவேந்திர ஓட்டுகளை மருந்தாக்கி கொள்வது என்பது காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் கை வந்த கலையாக இருக்கிறது. ஜெயலலிதா இப்போது எம்.ஜி.ஆர் வியூகத்தை கையில் எடுத்திருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர் வியூகம் என்பது பட்டியல் இனமக்களின் வாக்குகளை தேர்தலின் போது பயன்படுத்திக் கொள்வது தானே. அதன் ஒரு பகுதியாகத் தானே புதிய தமிழகத்  தலைவருடன் தற்போது உறவாடுகிறார். புநான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்பூ என்று சொல்லி ஆதிக்க சாதி வெறியர்களை அரவணைத்துக் கொண்டு, அதே நேரத்தில் தன்னையும் ஒரு ஆதிக்க சாதி வெறியராக அடையாளப்படுத்திக் கொண்ட அதே ஜெயலலிதா தான் இன்று எம்.ஜி.ஆர் வியூகத்தை கையில் எடுத்துக் கொண்டு எம் இன மக்களிடம் தேர்தலின் போது வர இருக்கிறார். புதிய தமிழகத் தலைவரையும் கூட்டிக் கொண்டு வரலாம். அல்லது பணத்தை அள்ளித் தரலாம். ஓட்டுச் சீட்டு என்ன வாரச் சந்தையில் விற்கும் வணிகப் பொருளா, அதை நாம் அவர்களிடம் விற்பதற்கு. அது நம் உரிமைக்கான துருப்புச் சீட்டு.

தேவேந்திர மக்களின் சிந்தனைக்காக ஒரு செய்தி. எட்டு சகவிகித வாக்குகளைக் கொண்ட விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க "குடிகாரன்" என்று சொன்ன ஜெயலலிதாதவும், "சினிமாக்காரன்" என்று சொன்ன ராமதாசும், காங்கிரசும் தூது விடும் நிலையில், 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஆறில் ஒருவரை பட்டியல் இன மக்களாகக் கொண்ட தமிழகத்தில், அந்த பட்டியல் இனமக்களிலும் பெரும்பான்மை மக்களாக தேவேந்திர மக்கள் இருக்கும் நிலையிலும் அரசியல் தீண்டாமையை எம் இன மக்கள் அனுபவித்து வருவதற்கு யார் காரணம்? என்ன காரணம்? இத்தனை பெரும்பான்மை மக்களை எல்லா அரசியல் கட்சிகளும் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறதே, ஏன்?

500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கும் ஓட்டுகளை விற்பது என்பது தேவேந்திர மக்கள் தம் உரிமைகளை விற்பதற்குச் சமம் ஆகும். ஆகையால் நம் இன மக்களுக்கான பொழுது நிச்சயம் விடியும் - அது பகுஜன் சமாஜ் கட்சியால் முடியும் என்ற நம்பிக்கையோடு, "இனி தேவேந்திரர்கள் ஓட்டு விற்பனைக்கல்ல" என்று எழுதி வைப்போம் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும்.

0 comments:

Post a Comment