"தேசத்தின் தலையெழுத்து வகுப்பறையின் நான்கு சுவற்றிற்குள் தான் தீர்மானிக்கப்படுகிறது" - பேராசிரியர் ஈ.ஸ். கோத்தாரி அவர்களின் தலைமையிலானை இந்திய கல்விக் குழுவின் 700 பக்க அறிக்கை இப்படித் தான் துவங்குகிறது. இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்க வல்ல கல்வி நிச்சயம் நம் இனத்தின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் வல்லமை உடையது என்பதில் எவரும் எள் முனையளவு கூட மாற்றுக் கருத்து கொள்ள முடியாது. ஒருவனின் அளிக்கப்படும் கல்வி என்பது அவனின் அடுத்ததடுத்த தலைமுறைக்கு அளிக்கப்படும் கல்விக்கு சமம். அதனால் தான் அண்ணல் அம்பேத்கரும் "விடுதலைக்கு முதற்படி அறிவு; அறிவே செயலின் தொடக்கம்; அந்த அறிவிக்கு அடிப்படை க்ல்வி" என்ற உண்மையை அறிந்திருந்த காரணத்தினால் தான் ஒடுக்கப்பட்ட மக்களில் சிந்த்னையாளர்களை உருவாக்கும் பொருட்டு மராத்வாடா பகுதியில் ஒரு கல்விக் கழகத்தை நிறுவவும் முயன்றார். அப்படி மகத்துவம் வாய்ந்த கல்வி அறிவு என்பது அனைத்து இளைய தேவேந்திர மக்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வொரு தேவெந்திர கல்வியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் கடமையாகும்.
அரசாங்க இயந்திரம் என்பது அரசு, நிர்வாகம், மற்றும் நீதி துறைகளின் என்ற அடிப்படையிலே இயங்குகிறது. மக்களுக்கான திட்டங்களையும், சட்டங்களையும் அரசு துறை தீட்டுகிறது என்றால, தீட்டப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் நிர்வாகத்துறையும், ம்க்களுக்கான அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நீதித்துறையும் தத்தமது பணிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், அரசியல் அனாதைகளாக ஆக்கப்பட்டு, வெறும் வாக்களிக்கும் இயந்திரமாக மாற்றப்பட்ட வெகு ஜன மக்களான எம் இனமக்களுக்கு அரசியல் தீர்வை அடைவதற்கான வழிவகைகளை ஆராய்வதோடு நில்லாமல், நிர்வாகத் துறையிலும் தேவேந்திர மக்களின் நேரிடையான பங்களிப்பிற்கு வித்திட வேண்டியதும் அவசியமாகிறது. கன்ஷிராம் ஜி அவர்களின் பாம்செப் என்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசு ஊழியர்களின் அமைப்பு தான் பின்னாளில் பகுஜன் சமாஜ் கட்சியாக வளர்ந்து இன்று இந்தியாவின் பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. நிர்வாகத்துறையின் அங்கமான காவல்துறையின் ஈ.எ.ட-யாக பொன்.பரமகுரு என்ற தேவர் இருந்ததன் காரணமாகவே, 400க்கும் மேற்பட்ட பரமகுருவின் சாதியைச் சேர்ந்தவர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் ஆனார்கள் என்பது கடந்த காலம் நமக்கு காட்டும் உண்மை.
என்ன தான் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி நமக்கான சட்டங்களை நாமே இயற்றினாலும், அதை செயல்படுத்துவதற்கான பொறுப்பு நிர்வாகத்துறையிடமே உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிர்வாகத்துறையில் இடம் பெறுவதற்கு கல்வி அறிவு என்பது அவசியமாகிறது. சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த செட்டியார்களுக்கும், பார்பனியர்களுக்கும் தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன என்பதும், சமுதாயத்தில் காமராசர் காலத்திற்கு முன்பு வரை கடை நிலை சமுதாயமாக இருந்த நாடார்களுக்கு கூட அவர்களுக்கென தனியாக கல்வி நிறுவனங்கள் இருக்கிறது என்பதும் தேவேந்திர கல்வியாளர்களும், அரசுத்துறையைச் சார்ந்தோரும் மற்றும் தொழில் முனைவோர்களும் சிந்திக்க வேண்டியதாகும். மேலும், ஒவ்வொரு தேவேந்திர இளைய தலைமுறையும் கல்வி பெறுவதை நிதி உதவி அளித்தோ அல்லது இன்ன பிற உதவிகள் அளித்தோ உறுதி செய்ய வேண்டியது தேவேந்திர கல்வியாளர்கள், அரசுத்துறையைச் சார்ந்தோர் மற்றும் தொழில் முனைவோர்கள் முன் உள்ள கடமையாகும். தேவேந்திர கல்வியாளர்கள் தாம் பெற்ற கல்வியறிவின் மூலம் கடைக்கோடி தேவேந்திரனையும் சென்றடையலாம். அரசுத் துறையைச் சேர்ந்த தேவேந்திரர்கள் அரசின் திட்டங்கள் அனைத்து தேவேந்திர மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களுக்கு அரசு ரீதியான உதவிகளை செய்வதோடு நில்லாமல், விரைந்து செய்து கொடுக்க வேண்டும். திட்டங்களைப் பெறுவதில் தாமதமோ, கவனிக்க வேண்டி கட்டாயமோ காட்டக் கூடாது. தேவேந்திர தொழில் முனைவோர்கள் வறுமை நிலையில் உள்ள தேவேந்திர குழந்தைகளை தத்தெடுத்து கல்விக்கான நிதி உதவியை அளிக்கலாம்.
வெந்ததைத் தின்று, வந்த வேலையைச் செய்து, வாழ்க்கையை ஓட்டி, பாரதி சொன்ன "வேடிக்கை மனிதரைப்" போல் இனியும் எம் இன மக்கள் இருத்தல் ஆகாது. ஆகவே நம் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது இன்றைய என்பது காலக் கட்டத்தின் கட்டாயமும் ஆகிறது. அவ்வாறு கல்வி அளிப்பதன் மூலமும், அறிவுப் புரட்சி ஏற்படுத்துவதன் மூலமும் அரசாங்கத்தின் மூன்று தூண்களான அரசு, நிர்வாகம் மற்றும் நீதி ஆகியவற்றின் மொத்தத்தையும் கைப்பற்றலாம். கைப்பற்றுவோமா?
தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி All Rights Reserved. Free Blogger Templates created by Deluxe Templates
Wordpress Theme by Skinpress | Entertainment Show One Tree Hill on Watch One Tree Hill Online and TV Shows.
0 comments:
Post a Comment