twitter
    தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி

தேவேந்திர முன்னேற்ற முன்னணி (DMM), தேவேந்திர அறிவுசார் குழுமமான (DEED) மற்றும் அகில இந்திய மள்ளர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பு ஆகியவற்றின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 10-10-2010 அன்று மதுரையில் உள்ள டீநோபில் மையத்தில் நடைபெற்றது. இதில் தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் நிறுவனரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளர் திரு. இ.பா.ஜீவன்குமார் அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் தலைவர் திரு. சீனிவாசன், இயக்குனர் திரு. தங்கராஜ், பொருளாலர் திரு. நாகராஜ் ஆகியோர்களும்,  தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் திரு. அரங்கராஜன், மாநிலச் செயலாளர் திரு. மணிவண்ணன் ஆகியோரும், கில இந்திய மள்ளர் தொழில் மற்றும் வர்த்தக அமைப்பின் நிர்வாக இயக்குனர் திரு. புகழேந்தி அவர்களும் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து வந்த கல்வியாளர்களும், தொழிலதிபர்களும், தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் பொருளாலரான திரு. நாகராஜன் அவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவற்றைப் பற்றி விளக்கினார். இதைத் தொடர்ந்து திரு. ஜீவன்குமார் அவர்கள் தேவேந்திர முன்னேற்ற முன்னணி மேற்கொண்ட களப்பணிகளை பட்டியலிட்டதோடு, அது தேவேந்திர மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தையும், பெற்ற வரவேற்பையும் புகைப்படங்களோடு விவரித்தார். மேலும் தேவேந்திர விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் தி.மு.க அரசின் முதல்வர் கருணாநிதி அவர்களால் திரு. உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பழிவாங்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி மதுரை உட்பட பல்வேறு இடங்களில் நடத்திய போராட்டங்களையும், கருணாநிதியின் தேவேந்திர விரோதப் போக்கை கண்டித்தும், திரு. உமாசங்கர் ஐ.ஏ.எஸ் பணியிடை நீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் பாராளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களிலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை திரு. ஜீவன்குமார் நினைவு கூர்ந்த அதே வேளையில், அதற்கான வேலைகளை சிறப்பாக செய்த தூத்துக்குடி மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் திரு. செல்வம் அவர்களையும் பாராட்டினார். மேலும் திரு. உமாசங்கர் அவர்களின் பணியிடைநீக்கம் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது என்பதை பாராளுமன்றத்தில் வலியுறுத்தும் விதமாக, திரு. ஜீவன்குமார், திரு. செல்லப்பன் மற்றும் திரு. மணிவண்ணன் உள்ளிட்ட குழுவினர் பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரமோத் குரில் அவர்களை டெல்லியில் நேராக சந்தித்ததும் ஆலோசனைக்கூட்டத்தில் நினைவுறுத்தப்பட்டது. மேலும் ஆதிதிராவிட நலத்துறை என்ற பெயரை பட்டியல் இனமக்களின் நலத்துறை என்று மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரமோத் குரில் அவர்கள் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தின் நகலும் ஆலோசனைக்கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து "ஆளும் வர்க்கம்" பற்றியும், அதன் சிறப்பம்சங்கள் எப்படி தேவேந்திர மக்களுக்கு பொருந்தியுள்ளது என்பது பற்றியும் திரு. இ.பா.ஜீவன்குமார் அவர்கள் விளக்கியது கல்வியாளர்களின் புருவங்களையும் ஆச்சரியத்தில் விரியச் செய்தது.

திரு. நாகராஜன் அவர்கள் தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் வரவு மற்றும் செலவுகளுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்பித்து விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் இயக்குனரான திரு. தங்கராஜ் அவர்கள் தெளிவான, தேவையான நீண்டதொரு உரையை நிகழ்த்தினார். தொடர்ந்து தேவேந்திர அறிவுசார் குழுமத்தின் தலைவர் திரு. சீனிவாசன் மற்றும் திரு. செல்லப்பன் ஆகியோர் உரை ஆற்றினர். அடுத்தபடியாக, தேவேந்திர முன்னேற்ற முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் திரு. அரங்கராஜன் அவர்கள் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டியும், நிர்வாகிகள் நியமிக்க வேண்டியதைப் பற்றியும் விளக்கினார். மேலும் ஆலோசனக் கூட்டத்தில் கலந்து கொண்ட கல்வியாளர்களும், அரசு ஊழியர்களும், தொழிலதிபர்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும் பொருட்டு, ஒவ்வொருக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக தேவேந்திர முன்னேற்ற முன்னனிக்கு என்று தலைமை அலுவலகம் ஏறத்தாழ 50-65 லட்சம் மதிப்பீட்டில் திருச்சியில் கட்டப்படும் என்ற அறிவிப்பும், தேவேந்திர முன்னேற்ற முன்னணிக்கு என்று செல்வி. உதயா செல்வி அவர்களின் http://deeddmm.webnode.com/ மற்றும் திரு. புகழேந்தி அவர்களின்  http://devendirarmunnetramunnani.blogspot.com/ என்ற ஆங்கில இணையதளங்களும், மேலூர் க.தனபாலன் அவர்களின் தமிழ் மொழியிலான http://dmm-tn.blogspot.com/  என மொத்தம் மூன்று இணையதளங்கள் (பிளாக்குகள்) அறிமுகம் செய்யப்பட்டது.  திரு. தனக்கோடி அவர்களை தலைவராக கொண்டு கட்டப்படும் இந்த தலைமை அலுவலகத்தின் அமைப்புகளையும், அதில் உள்ள வசதிகளையும் திரு. புகழேந்தி அவர்கள் தெளிவாக விளக்கினார்.

தேவேந்திர அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள தேவேந்திர மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு அவர்களை தத்தெடுக்க வேண்டும் என்ற திரு. காந்தி அவர்களைத் தொடர்ந்து, மாவட்டம் தோறும் தேவேந்திர மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டியும், அதற்கான பணிகளை தேவேந்திர இளைஞர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை தூத்துக்குடியின் திரு. திருஞானம் அவர்கள் வைத்தார்கள். மேலும் தேவேந்திர மக்களின் நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்படவேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்   கல்வியாளர்கள் திரு.பெரியசாமி, மருத்துவர் திரு. காந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் திரு.தவமணி, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் திரு.செல்வம் மற்றும் அலுவலகச் செயலாளர் திரு. லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment